• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 43 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

1/1/2025

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 43 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
பரமன் அறிவான் பக்தர்கள் பக்குவம்
“ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று அறிந்து செயல்ற் றிருந்திடில்
ஈசன்வந் தெம்மிடை ஈண்டிநின் றானே”                          பாடல் எண் 288
​
இறைவனாகிய பரம்பொருள், பகலிரவென்று பாராது எந்த நேரமும், தன்மேல் பாசம் வைத்து அன்பு பாராட்டி வழிபடுபவர்கள் யாரென்று அறிவான். எனவே சோதி ஒளியோடு கூடி, அதனோடு கலந்து, வேறு புறச் செயல்கள் எல்லாம் அடங்கத் தியான நிலையில் இருந்தால், இறைவன் நம்மை நாடிவந்து நம்முள் புகுந்து நல்லருள் புரிவான்.   


Picture
தேவன் அருள் திருமஞ்சனம்
“விட்டுப் பிடிப்பதுஎன் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டுமென் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே”                                பாடல் எண் 289

பேரருட் பெருஞ் சோதியாக இருக்கிற இறைவனை விட்டுப் பிடிப்பது என்பது நடக்கக் கூடியதா? பிடிக்குள் அகப்படும் பொருளோ பரமன்? எனவே நான் அவன் அருள் ஒளியைத் தொட்டுத் தொடர்வேன். அடி பற்றி வழி நடப்பேன். அதன் மூலம் அழியாப் பெருவாழ்வை நான் பெறுவேன். என் ஆருயிருள், உயிருக்குயிராய்க் கலந்து, என்னுள் இருக்கின்ற ஈசனோடு இரண்டறக் கலப்பதன் மூலம், நான் அவன் அருள் வெள்ளத்தில் அமிழ்ந்து மூழ்குவேன்.

கல்வி
“குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே”                            பாடல் எண் 290

இந்த உலகில் உடல் பெற்று வந்ததன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். உயிர் உடலில் பொருந்தி நிறைந்துள்ளதையும் உணர்ந்தேன். இதனால் தேவர் தலைவனான தேவாதி தேவன் சிவபெருமான், தடையேதுமின்றி, என்னுள்ளத்தில் குடிபுகலானான். நானும் விளக்கிச் சொல்ல முடியாத அனுபவ அறிவாகிய ஞானத்தைப் பெற்றேன்.

ஞானக் கண்
“கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருதிலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யும்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே”                            பாடல் எண் 291

மேலான கல்வி அறிவு அடையப் பெற்றவர்கள் சற்றே சிந்தித்துப் பார்த்தால், அவர் நினைவில் ஞானக் கண் ஒன்று உள்ளது என்பதை உணர்வார்கள். இதனை உணர்ந்த கற்றறிவாளர்கள் தாங்கள் அடைந்த அனுபவஞானமாகிய கல்வியை மற்றவர்களுக்கும் விளக்குவார்கள். இப்படி அவர்கள் விளக்கிக் காட்ட, அப்படியொரு கண், அகக் கண் இருப்பதை அயலவரும் அறிவார்கள்.

ஞான மணி விளக்கு
“நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக்(கு) ஆமே”                         பாடல் எண் 292

உயிர் உடலில் இருக்கும் போதே, உலகில் உயிரோடும் உணர்வோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே, அழிவற்ற என்றும் நிலையாய் இருக்கின்ற இறைவனை உணர்ந்தறியும் கல்வியைக் கற்க முயற்சி செய்யுங்கள். செய்தால் பாவங்கள் பறந்தோடிப் போகும். மனம் ஒன்றி வழிபடுங்கள் ஈசனை. இப்படி வழிபாடு செய்வோர் ஒப்பரிய சோதி ஒளியாகிய ஞானவிளக்கொளி காணப்பெறுவர்.
 
ஞான ஒளி உடம்பு
“கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்(து) உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே”                            பாடல் எண் 293

மெய்யறிவாகிய உண்மைக் கல்விஞானம் கைவரப் பெற்றவர்கள், அறியாமையால் வரும் துன்பத்தை விட்டு விலகிப் போகின்றனர். உலகியல் இன்பங்களில் ஆசை வைத்தவர்கள், உள்ளொளி ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளாது, அதை வீணடித்துவிட்டு வெறும் உடலுக்கு, நாவுக்குச் சுவையான உணவைத் தேடி அலைகின்றனர். எனவே இரவும், பகலும் இறைவனை எண்ணித் துதியுங்கள். இப்படிச் செய்தால் உருக்கி ஊற்றிய பொன்போல் அழியாத் தவஞான உடல் பெறலாம்.

ஞானக் கல்வி
“துணைஅது வாய்வரும் தூயநற் சோதி
துணைஅது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணைஅது வாய்வரும் தூயநற் கந்தம்
துணைஅது வாய்வரும் தூயநற் கல்வியே”                       பாடல் எண் 294

இறைவனை நம்பித் தொழுபவர்களுக்கு, அவனுடைய அருளாகிய ஒளியே துணையாக வரும். இறைவனுடைய திருப்பெயரே அவருக்குத் துணையாக நிற்கும். ஞானமாகிய கல்வியின் நறுமணம் அவர்களுக்குத் துணையாக வந்துதவும். இவ்வளவு துணைக்கும் துணையாக தோள் கொடுத்து உதவுவது அவர்கள் பெற்ற மெய்யறிவே அதாவது ஞானக் கல்வியே.
​

Visit counter For Websites
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    ALL
    திருமந்திரம் தொடர்கள்

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025