
திருமந்திரம் - பாகம் 45
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
சேம நிதி சிவ சிந்தனையே
“மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்
அயன்பணி கேட்பது அரண்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே” பாடல் எண் 302
நந்தியெம் பெருமான் அருளாணைப்படி திருமாலும் பணி செய்வான். சிவத்தொண்டு புரிந்தால் பிரமனும் ஏவல் செய்வான். சிவன் கட்டளைக்கேற்ப நடப்பவர் தேவரும் ஆவர். சிவபெருமான் ஆணைப்படி அருள் வழி நடப்பதால் அவன் அருள் துணை என்றும் நமக்குப் பேரின்பப் பெரும் பற்று ஆகும்.
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
சேம நிதி சிவ சிந்தனையே
“மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்
அயன்பணி கேட்பது அரண்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே” பாடல் எண் 302
நந்தியெம் பெருமான் அருளாணைப்படி திருமாலும் பணி செய்வான். சிவத்தொண்டு புரிந்தால் பிரமனும் ஏவல் செய்வான். சிவன் கட்டளைக்கேற்ப நடப்பவர் தேவரும் ஆவர். சிவபெருமான் ஆணைப்படி அருள் வழி நடப்பதால் அவன் அருள் துணை என்றும் நமக்குப் பேரின்பப் பெரும் பற்று ஆகும்.
மனிதன் தேவன் ஆவான்
“பெருமான் இவன்என்று பேசி இருக்கும்
திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்
வரு மாதவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அரு மாதவத்துஎங்கள் ஆதிப் பிரானே” பாடல் எண் 303
பெருமைக்குரிய பரம்பொருள் சிவபெருமானே என்று பேசிக்கொண்டிருக்கின்ற ஆன்மாக்களாகிய மனிதர்கள், தம் பக்தியாலும் தவத்தாலும் தெய்வ நிலை பெற்றுத் தேவரும் ஆவர். இப்படி மனிதராக இருந்து, தேவ நிலை பெற்று வரும் மாதவம் செய்த யோகிகளுக்கு விரும்பி அருள் தருவான், அரிய பெரிய தவத்துக்கெல்லாம் அதிபதியும், முழு முதல் பரம் பொருளுமாகிய சிவபெருமான்.
பூவின் மணமாய்ப் பொருந்துவான் இறைவன்
“ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமும் ஆகும் நிகழொளியாய் நின்று
வாச மலர்க்கந்த மன்னிநின் றானே” பாடல் எண் 304
உயிர்களுக்கு இறப்பையும், பிறப்பையும் இறைவனே தருகிறான். எனவே அவன் தந்த இந்தப் பிறவி இருக்கும் போதே, அவன் புகழைப் பேசி, அவன் அருளில் பயித்தியமாகி, அகமகிழ்ந்து இருங்கள். இப்படி இருந்தால் அவன் அன்பும் நேசமும் கிட்டும். அவன் நம் உள்ளத்தில், வாசமலரில் மணம் கலந்திருப்பது போலச், சோதி ஒளியாகக் கலந்து இருப்பான்.
ஒழுக்கம் உயர்வு தரும்
“விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்(து)
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே” பாடல் எண் 305
பரம்பொருள் உயர்வையும், கேள்வியால் பெற்ற அறிவையும், உயர்ந்த மெய்ஞான அறிவையும், நல்ல ஒழுக்க நெறிகளையும் மனம் உணருகின்ற போது, அதில் தவறிவிடாமல் நிலையாக நிற்பார்களானால், தேவர்கள் தலைவனான இந்திரனும் அளவற்ற காலம் குறையின்றி இருக்க அருள் புரிவான்.
பிள்ளை விளையாட்டு
“சிறியார் மணல்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே” பாடல் எண் 306
சிறுவர்கள் மணல் வீடு கட்டி மகிழ்வார்கள். அங்கே சோறு சமைத்து உண்பது போலவும் விளையாடிக் களிப்பார்கள். இது போலத்தான் உலக வாழ்வில் அடையும் அனுபவங்களால் இறையருள் கிடைத்துவிடும் என்று நினைப்பதும். மணல்வீடு நிசமல்ல பொய், பிள்ளை விளையாட்டு. இது போன்றதுதான் உலக வாழ்வில் உழல்பவர்கள் இறை உணர்வு பெற்றுவிடலாம் என்று நினைப்பதும். இன்ன உரு, இன்ன நிறம் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத பரம்பொருள் அறிவைப் பெறுவதைக் குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள் வாழ்வு பொய். அவர் தம்மையும் அறியார், தம்முள் இருக்கும் தலைவனையும் அறியமாட்டார்.
உயிருக்கு உற்ற துணை
“உறுதுணை யாவ(து) உயிரும் உடம்பும்
உறுதுணை யாவ(து) உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே” பாடல் எண் 307
உடம்புக்கு உற்ற துணையாக இருப்பது உள் இயங்கும் உயிர். உயிருக்கு நெருக்கமான துணை உலகில் உள்ள ஞானிகளின் கேள்வி அறிவு தரும் செல்வம். இந்தக் கேள்விச் செல்வம் நிறைவடைவது, சிவபெருமானின் திருவடிகளில் பேரருளில் மனம் பற்றி இருப்பதில். இப்படிப்பட்ட பெறுதற்கு அரிதான பெருந்துணையின் பெருமையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இதனால் அடையும் பயன் என்ன எனில், பிறவித் துன்பம் இல்லாது போவதுதான்.
வாழ்நாள் பயனுற வாழ்க
“புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின்று ஆதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்குஒரு கல்பசு ஆமே” பாடல் எண் 308
விண்ணும் மண்ணும் தேவாதி தேவர்களும் போற்றி வணங்கும் எம் தலைவன் சிவன். அனாதி காலம் தொட்டு இருப்பவன். பழமையானவன். இவனைப் புகழாது இகழ்பவர்கள் துன்பப் படுவதற்குக் காரணமாயிருப்பவன். இப்படிப்பட்ட இறைவனான ஆதிமுதலைப் புகழ்ந்து பாடித் துதித்துப் பணிந்து வணங்க உணராது, வாழ்நாளை வீணே கழிப்பவர்க்கு, அவன் கல்லால் ஆன பசு. கல் பசு பால் தருமா? தராது. அதுபோலத்தான் இவர்களுக்கும் இறையருள் கிட்டாது.
“பெருமான் இவன்என்று பேசி இருக்கும்
திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்
வரு மாதவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அரு மாதவத்துஎங்கள் ஆதிப் பிரானே” பாடல் எண் 303
பெருமைக்குரிய பரம்பொருள் சிவபெருமானே என்று பேசிக்கொண்டிருக்கின்ற ஆன்மாக்களாகிய மனிதர்கள், தம் பக்தியாலும் தவத்தாலும் தெய்வ நிலை பெற்றுத் தேவரும் ஆவர். இப்படி மனிதராக இருந்து, தேவ நிலை பெற்று வரும் மாதவம் செய்த யோகிகளுக்கு விரும்பி அருள் தருவான், அரிய பெரிய தவத்துக்கெல்லாம் அதிபதியும், முழு முதல் பரம் பொருளுமாகிய சிவபெருமான்.
பூவின் மணமாய்ப் பொருந்துவான் இறைவன்
“ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமும் ஆகும் நிகழொளியாய் நின்று
வாச மலர்க்கந்த மன்னிநின் றானே” பாடல் எண் 304
உயிர்களுக்கு இறப்பையும், பிறப்பையும் இறைவனே தருகிறான். எனவே அவன் தந்த இந்தப் பிறவி இருக்கும் போதே, அவன் புகழைப் பேசி, அவன் அருளில் பயித்தியமாகி, அகமகிழ்ந்து இருங்கள். இப்படி இருந்தால் அவன் அன்பும் நேசமும் கிட்டும். அவன் நம் உள்ளத்தில், வாசமலரில் மணம் கலந்திருப்பது போலச், சோதி ஒளியாகக் கலந்து இருப்பான்.
ஒழுக்கம் உயர்வு தரும்
“விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்(து)
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே” பாடல் எண் 305
பரம்பொருள் உயர்வையும், கேள்வியால் பெற்ற அறிவையும், உயர்ந்த மெய்ஞான அறிவையும், நல்ல ஒழுக்க நெறிகளையும் மனம் உணருகின்ற போது, அதில் தவறிவிடாமல் நிலையாக நிற்பார்களானால், தேவர்கள் தலைவனான இந்திரனும் அளவற்ற காலம் குறையின்றி இருக்க அருள் புரிவான்.
பிள்ளை விளையாட்டு
“சிறியார் மணல்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே” பாடல் எண் 306
சிறுவர்கள் மணல் வீடு கட்டி மகிழ்வார்கள். அங்கே சோறு சமைத்து உண்பது போலவும் விளையாடிக் களிப்பார்கள். இது போலத்தான் உலக வாழ்வில் அடையும் அனுபவங்களால் இறையருள் கிடைத்துவிடும் என்று நினைப்பதும். மணல்வீடு நிசமல்ல பொய், பிள்ளை விளையாட்டு. இது போன்றதுதான் உலக வாழ்வில் உழல்பவர்கள் இறை உணர்வு பெற்றுவிடலாம் என்று நினைப்பதும். இன்ன உரு, இன்ன நிறம் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத பரம்பொருள் அறிவைப் பெறுவதைக் குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள் வாழ்வு பொய். அவர் தம்மையும் அறியார், தம்முள் இருக்கும் தலைவனையும் அறியமாட்டார்.
உயிருக்கு உற்ற துணை
“உறுதுணை யாவ(து) உயிரும் உடம்பும்
உறுதுணை யாவ(து) உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே” பாடல் எண் 307
உடம்புக்கு உற்ற துணையாக இருப்பது உள் இயங்கும் உயிர். உயிருக்கு நெருக்கமான துணை உலகில் உள்ள ஞானிகளின் கேள்வி அறிவு தரும் செல்வம். இந்தக் கேள்விச் செல்வம் நிறைவடைவது, சிவபெருமானின் திருவடிகளில் பேரருளில் மனம் பற்றி இருப்பதில். இப்படிப்பட்ட பெறுதற்கு அரிதான பெருந்துணையின் பெருமையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இதனால் அடையும் பயன் என்ன எனில், பிறவித் துன்பம் இல்லாது போவதுதான்.
வாழ்நாள் பயனுற வாழ்க
“புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின்று ஆதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்குஒரு கல்பசு ஆமே” பாடல் எண் 308
விண்ணும் மண்ணும் தேவாதி தேவர்களும் போற்றி வணங்கும் எம் தலைவன் சிவன். அனாதி காலம் தொட்டு இருப்பவன். பழமையானவன். இவனைப் புகழாது இகழ்பவர்கள் துன்பப் படுவதற்குக் காரணமாயிருப்பவன். இப்படிப்பட்ட இறைவனான ஆதிமுதலைப் புகழ்ந்து பாடித் துதித்துப் பணிந்து வணங்க உணராது, வாழ்நாளை வீணே கழிப்பவர்க்கு, அவன் கல்லால் ஆன பசு. கல் பசு பால் தருமா? தராது. அதுபோலத்தான் இவர்களுக்கும் இறையருள் கிட்டாது.