வணக்கம் அன்பு மயிலிட்டி உறவுகளே !
1990ம் ஆண்டிற்கு முன் எமது மயிலிட்டி மண் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் - ஞா. அன்ரன்
1990ம் ஆண்டிற்கு முன் எமது மயிலிட்டி மண் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் - ஞா. அன்ரன்
1990ம் ஆண்டிற்கு முன் எமது மயிலிட்டி மண் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் - ஞா. அன்ரன்9/1/2026
வணக்கம் அன்பு மயிலிட்டி உறவுகளே !
1990ம் ஆண்டிற்கு முன் எமது மயிலிட்டி மண் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கிய ஒரு ஊர் - ஞா. அன்ரன்
1 Comment
23.12.1964ல் மிகப் பெரிய சூறாவளிப்புயல் தாக்கியதில், மயிலிட்டிப் படகுகளில் சென்றவர்களில் கடலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 153 பேர் வரை எனத் தகவல் உள்ளது. மயிலிட்டி மீனவர்களின் படகுகள் பருவகால மீன்பிடித்தலுக்காக தீவுப் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.
இதில் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் 56 பேர் வரை மரணத்தை எய்தியவர்கள். ஏனையோர் எமது ஊர் படகுகளில் தொழில் புரிந்தவர்கள் என்று அறிய முடிகின்றது. இயற்கை அனர்த்தங்கள் அதிகம் காவு கொள்வது மீனவக் குடும்பங்களை தான் என்பதற்கு சுனாமி போன்ற எத்தனையோ ஆழிப் பேரழிவுகளை பட்டியலிடமுடியும்.
எஸ்.ஆர் சகோதரர்கள் எனும் இராசதுரை, சுப்பிரமணியம், பஞ்சலிங்கம், அமிர்தலிங்கம் சகோதரர்கள் அன்று 9 சிறுபடகுகளுடன் முன்னேறிக் கொண்டு வந்த, ஓர் சகோதர ஒற்றுமைக்கு இலக்கான கூட்டு நிறுவனத்தினரால் காரைநகர் சீநோர் நிறுவனத்தில் படகு வாங்குவது இவர்களின் வளக்கமாகவிருந்த போது. இவர்களின் கடைசித் தம்பி அமிர்தலிங்கம் (கட்டையப்பா) நாமும் இப்படி ஒரு இழுவைப்படகு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தனது அண்ணன் இராசதுரையிடம் கூற அவர் முதலில் அது சிரமம் என்று கூறி தவிர்த்திருந்தார். பின்னர் தம்பியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்தார்.
|
அன்ரன் ஞானப்பிரகாசம்மயிலிட்டி பதிவுகள்
January 2026
முன்னைய பதிவுகள் |