![Picture](/uploads/7/3/7/4/7374965/published/tm-30.jpg?1691355966)
திருமந்திரம் ( பாகம் 30 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பசிக்குச் சோறு பரமன் பூசை
“அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வல்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக் கொடுஉண்மின் தலைப்பட்ட போதே” பாடல் 196
அடுத்தவர் மீது பொறாமை கொண்டு, அவதூறாகப் பேசி, அநியாயம் செய்யாதீர்கள். நீதி நூல் கூறிய நல்வழி கெட நடக்காதீர்கள். பெரும் கோபம் கொண்டு, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளாதீர்கள். எல்லாச் சிறப்பும் பெருமையும் பெற்று வாழ்வில் சிறந்திருக்கும் போதே, நீங்கள் உண்ணும் போது பசி என்று யாரேனும் உங்களிடம் வந்தால் அப்போதே அவர்களுக்கு உண்ண உணவைக் கொடுத்துவிட்டு நீங்கள் உண்ணுங்கள். இதுவே வாழும் வழி (வாழ்க்கை நெறி)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பசிக்குச் சோறு பரமன் பூசை
“அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வல்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக் கொடுஉண்மின் தலைப்பட்ட போதே” பாடல் 196
அடுத்தவர் மீது பொறாமை கொண்டு, அவதூறாகப் பேசி, அநியாயம் செய்யாதீர்கள். நீதி நூல் கூறிய நல்வழி கெட நடக்காதீர்கள். பெரும் கோபம் கொண்டு, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளாதீர்கள். எல்லாச் சிறப்பும் பெருமையும் பெற்று வாழ்வில் சிறந்திருக்கும் போதே, நீங்கள் உண்ணும் போது பசி என்று யாரேனும் உங்களிடம் வந்தால் அப்போதே அவர்களுக்கு உண்ண உணவைக் கொடுத்துவிட்டு நீங்கள் உண்ணுங்கள். இதுவே வாழும் வழி (வாழ்க்கை நெறி)