
திருமந்திரம் ( பாகம் 24 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
முடியுடை மன்னர்க்கும் முடிவு இதுதான்
“நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே” பாடல் 153
நாட்டுக்குத் தலைவனாக இருந்தவன். நமது ஊரில் மிகுந்த சிறப்பிற்குரிய பெருமகனாகத் திகழ்ந்தவன். இன்று பாடையில் ஏறிக் கடைசிப் பயணம் போகின்றான். நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வர, முன்னே பறை ஒலிக்கப் போகிறது இறுதி ஊர்வலம்” நாட்டுக்குத் தலைவனாக, ஊருக்குள் உயர்ந்தவனாக இருந்தவன் இன்று பெறுகின்ற மரியாதை இதுதான். உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைமையும், தகுதியும், பெருமையும். உயிர் போய்விட்டால் பிணம்தான். போகுமிடம் சுடுகாடுதான் என்பதாகும்.
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
முடியுடை மன்னர்க்கும் முடிவு இதுதான்
“நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே” பாடல் 153
நாட்டுக்குத் தலைவனாக இருந்தவன். நமது ஊரில் மிகுந்த சிறப்பிற்குரிய பெருமகனாகத் திகழ்ந்தவன். இன்று பாடையில் ஏறிக் கடைசிப் பயணம் போகின்றான். நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வர, முன்னே பறை ஒலிக்கப் போகிறது இறுதி ஊர்வலம்” நாட்டுக்குத் தலைவனாக, ஊருக்குள் உயர்ந்தவனாக இருந்தவன் இன்று பெறுகின்ற மரியாதை இதுதான். உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைமையும், தகுதியும், பெருமையும். உயிர் போய்விட்டால் பிணம்தான். போகுமிடம் சுடுகாடுதான் என்பதாகும்.