
திருமந்திரம் ( பாகம் 5 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஓசை ஒலியானவன்
“முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.” பாடல் 20
முடிவாகிய இறப்பையும், தோற்றமாகிய பிறப்பையும் உயிர்களுக்குத் தந்து உதவியவனான, அடியவர்க்கு அடியவனான பரம்பொருள் இருக்கும் இடம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் அவன் இருக்கிமிடம் வாசமலர் பூக்கும் திருக்கயிலாய மலையே ஆகும். அன்பர் உள்ளத்தில் கோயில் கொண்டவன். சுடலையில் உறைபவன். எனினும் அவன் ஓசை ஒலியானவன். வெள்ளிப் பனிமலையே அவன் வடிவம்.
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஓசை ஒலியானவன்
“முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.” பாடல் 20
முடிவாகிய இறப்பையும், தோற்றமாகிய பிறப்பையும் உயிர்களுக்குத் தந்து உதவியவனான, அடியவர்க்கு அடியவனான பரம்பொருள் இருக்கும் இடம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் அவன் இருக்கிமிடம் வாசமலர் பூக்கும் திருக்கயிலாய மலையே ஆகும். அன்பர் உள்ளத்தில் கோயில் கொண்டவன். சுடலையில் உறைபவன். எனினும் அவன் ஓசை ஒலியானவன். வெள்ளிப் பனிமலையே அவன் வடிவம்.