
திருமந்திரம் ( பாகம் 19 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஞான குருவாகி நடத்துபவன்
“அறிவையும் புலனுடனே நான்ற தாகி
நெறிஅறி யாதுற்ற நீராழமும் போல
அறிவு அறிவுள்ளே அழிந்தது போல
குறிஅறி விப்பான் குருபரன் ஆமே” பாடல் 119
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக, உண்டு, உணர்ந்து, நுகர்ந்து, கேட்டு, கண்டு மகிழ்வதான செயல்களில் ஈடுபட்டுச் சென்று சேரும் வழி தெரியாமல், ஆழங்காண முடியாத பிறவிக் கடலில் மூழ்கி, மனித அறிவானது அழிகின்றபோது, ஆன்மாக்களுக்கு நல் வழிகாட்டி அருளுபவன் ஞானாசிரியனான சிவபெருமானே ஆவான்.
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஞான குருவாகி நடத்துபவன்
“அறிவையும் புலனுடனே நான்ற தாகி
நெறிஅறி யாதுற்ற நீராழமும் போல
அறிவு அறிவுள்ளே அழிந்தது போல
குறிஅறி விப்பான் குருபரன் ஆமே” பாடல் 119
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக, உண்டு, உணர்ந்து, நுகர்ந்து, கேட்டு, கண்டு மகிழ்வதான செயல்களில் ஈடுபட்டுச் சென்று சேரும் வழி தெரியாமல், ஆழங்காண முடியாத பிறவிக் கடலில் மூழ்கி, மனித அறிவானது அழிகின்றபோது, ஆன்மாக்களுக்கு நல் வழிகாட்டி அருளுபவன் ஞானாசிரியனான சிவபெருமானே ஆவான்.