• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 03 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

5/11/2017

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 3 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
சிவனே எல்லாம்
“அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன்அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவன்அன்றி மூவரால் ஆவதுஒன் றில்லை
அவன்அன்றி ஊர்புகு மாறு அறியேனே”.                             பாடல் 6
சிவன் இல்லாமல் தேவர்கள் இல்லை. சிவனருள் இல்லாமல் செய்யப்படும் மேலான தவம் எதுவும் இல்லை. சிவன் இல்லாமல் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரால் எதுவும் செய்ய இயலாது. சிவன் அருள் இல்லாமல் விண்ணுலக வாழ்வடையும் வழியை நான் உட்பட எவராலும் அறிய முடியாது. ​

Picture
மூவர்க்கும் தேவன்
முன்னைஒப் பாய்உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னைஒப் பாகின்ற போதுஅகத் தானே”.                             பாடல் 7
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலும் புரியும் மூவருக்கும் சிவனே  தலையாயவன். இவன் தனக்கு உவமை சொல்ல இயலாத தனிப்பெரும் தலைவனானவன். பெற்ற தந்தையைப் போல உயிர்களுக்கு அருள் பாலிப்பவனாகவும் உள்ள இவனே, பொன்னைப் போலப் போற்றத்தக்க பெருமை உடையவன். என் உள்ளத் தாமரையில் வீற்றிருக்கின்ற இறைவன் இவன்.

                            தாயினும் இனியன்
“தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள்அறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லபின் தாழ்சடை யோனே”.                               பாடல் 8
நெருப்பை விடச் சூடானவன். குளிர்ந்த நீரிலும் குளிர்ச்சி உடையவன். என்றாலும் இப்படிப்பட்ட இறைவன் திருவருட் கருணையை முழுதுமாக அறிந்தவர் எவரும் இல்லை. எவராலும் முற்றவும் ஓதி உணர்தற்கரிய பரம்பொருள், குழந்தையை விடக் குதூகலம் தருபவன் கொண்டாடத் தக்கவன். விரும்பித் தொழும் அன்பர் கைக்கெட்டும் நெருக்கமாக, நேசமாக இருக்கும் அப்பரம் பொருள் தாயினும் இனிய தயவுடையது. தாழ்சடை தாங்கும் தயாபரன் அவனே மூல முதலாம் முழு முதல் கடவுள்.

                       எல்லோரும் தொழும் இறைவன்
“பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை என்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.”                              பாடல் 9
பொன்னால் செய்தது போல ஒளி வீசித் திகழும் தங்க நிறத் தாழ்சடை பின் கழுத்தின் கீழாக விழங்க இருக்கும் இறைவன் நந்திஎம்பெருமான். அவனே நான் பணிந்து தொழும் எம் கடவுள். நான் மட்டுமல்ல எல்லோரும் வணங்கி வழிபடும் கடவுளும் அவனே. இவன் எல்லோராலும் வணங்கத்தக்கவனாக இருக்கிறானே அன்றி இவன் வணங்கும் இறைவன் எவரும் இல்லை.

                     விண்ணும் மண்ணும் சிவபெருமானே
“தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கடல் ஆமே.”                                     பாடல் 10
 “இறைவன் இவனே, விரிந்தகன்ற மண்ணகமாகவும், உயர்ந்து பரந்த வானகமாகவும் இருக்கின்றான். சுட்டெரிக்கும் அக்கினியாகத் திகழும் இவனே சூரியனாகவும், சந்திரனாகவும் உள்ளான். மழையாய்ப் பொழிந்து உலகின் வாட்டத்தைப் போக்கும் தாயாக இருந்து தண்ணருள் புரியும் இவனே மலையாகவும், மா கடலாகவும் உள்ளான்.” அதாவது சூரியன், சந்திரன், பஞ்சபூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) எல்லாம் சிவபெருமானே.

                   எங்கும் நிறைந்தவன் எல்லாம் ஆனவன்
“அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவுமற்று ஆங்கே
பெயலும் மழைமுகில் பேர்நந்தி தானே”                               பாடல் 11
பக்கத்திலும், சுற்றிலும் அதாவது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற எம் மூல முதல்வனான இறைவனைப் போன்ற ஒரு கடவுள் வேறு எதுவும் இல்லை. அவனை அடைய, அவன் அருளைப் பெற ஆன்மாக்கள் முயலும் முயற்சிகளிலும், அதன் முடிவிலும், மற்றும் அதன் பயன்களிலும் அவனே பருவத்தில் பெய்து பயன் தரும் மழை மேகம் போல் உள்ளான். இவனே நந்தி எம்பெருமான்.

                                      விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் இவனே தெய்வம்
“கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்இலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்உறு வார்களும் வான்உறு வார்களும்
அண்ணல் இவன்அன்று அறியகில் லார்களே”                           பாடல் 12
நெற்றியில் கண்ணுடைய சிவபெருமான் உயிர்களுக்கெல்லாம் தன் அருட்கருணையை அள்ளித் தர விருப்பத்தோடு காத்திருக்கின்றான். ஆனால் அவனுடைய இந்த அளப்பரும் கருணையை உணராமல் பல தேவர்கள் அழிந்து போயினர். காரணம் மண்ணில் இருப்பவர்களுக்கும், தேவலோகத்தில் இருப்பவர்களுக்கும் இவனே மேலான தெய்வம் என்பதை அறியாமல் போனதாலாகும்.
​

இந்தப் பக்கம் hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    ALL
    திருமந்திரம் தொடர்கள்

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025