• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 10 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

23/2/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 10 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                                அறுசமயச் சாத்திரப் பொருளானவன்
”ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறங்கம் ஆகக் குணம்பயில்வார் இல்லை
வேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்
பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே”                                   பாடல் 55
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம், கௌமாரம் ஆகிய ஆறு சமயத்திற்கு ஒப்பற்ற வேதத்தை ஓதி அருளிய சிவபெருமானை, உமை அம்மைக்குத் தன் உடலின் இடப்பாகத்தை தந்த சிவப்பரம்பொருளின் அருளாற்றலைப் போற்றிப் புகழ்பவர் இல்லை. இப்படிப் புகழாதவர்கள் வேறு சமய சாத்திரங்களைப் பயின்று கடைப்பிடித்து அந்த வேறானவற்றையே பெரிதாகப் போற்றி செய்து வாழ் நாளை வீண் நாளாக்குகின்றார்களே! திருமூலரின் இக்கருத்தை அருணகிரிநாதரும் “அறு சமயச் சாத்திரப் பொருளோனே” எனக் கூறியுள்ளார்.

Picture
ஆடிப் பாடி அவனடி பணிக
“பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம்சென்று இகலல் உற்றாரே”                               பாடல் 56

யாழ், முழவு என்னும் இசைக் கருவிகள் கொண்டு இசை கூட்டிப் பாடும் இன்னிசையும், ஆடல் மகளிர் நாடெங்கும் சென்று நடத்தும் நாட்டியமும், இடைவிடாது தொடர்ந்து நடந்தபடியிருக்கும் இந்தப் பூமியில், இந்த ஆடல் பாடல் நெறிமூலம் ஆண்டவன் அருள் பெற நினையாமல், இதை ஏற்க மாட்டாதவராய் வேள்வி செய்தும், கொல்லாமை விரதம் இல்லாதவராக வழி தவறிச் சென்று ஒருவரோடொருவர் மோதி, முரணிச் சண்டை இடுபவர்களாயிருக்கிறார்கள்.

                      ஆகமப் பெருமை
“அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்
அஞ்சோடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.”                                               பாடல் 57

நீல நிறத்தவளான பார்வதியை தன் இடப்பாகமாகக் கொண்ட சிவபெருமான் இருபத்தெட்டு (5+23) ஆகமங்களையும் கைகூப்பி வணங்கி, அறுபத்தாறு யோக புருடர்களும் கேட்கத் தனது கீழ் மேல் நோக்கிய அஞ்சா ஈசான முகத்தால் அருளிச் செய்தான்.

                                                 போற்றி ஆகமம் புகழுவேன் நானே
“அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்து எண்கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் யானே”                           பாடல் 58

அருள் வழங்கும் பெரியோன் சிவபிரான் அருளிய சிவாகமத்தை ஏற்றிப் போற்றியவர்கள் விண்ணவர் முதலான எட்டுக் கோடி நூறாயிரம் என்று எண்ணிலடங்காதவர் ஆவர். அவர்கள் வழி நின்று நானும் சிவாகமச் சிறப்பை எண்ணிப் புகழ்ந்து பாடிப் பரவுவேன்.

                  அரன் அருளியது அனைத்து மொழிகளும்
“பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே”                               பாடல் 59

பண்டிதர் எனப்பட்டவர்கள் பதினெட்டு மொழியும் கற்றுத் தேர்ந்த விற்பனர் ஆவார். இவர்கள் உலகியலும், அறமும் உணர்ந்த மேலோர் ஆவார். இந்தப் பண்டிதப் பெருமக்கள் கற்றுத் தேர்ந்த பதினெட்டு மொழிகளும் அண்ட கோளங்கள் அனைத்திற்கும் மூல முதல்வனான வேத நாயகன் சொன்ன அறநெறியே ஆகும்.

               பொருளறிந்து போற்றுதலே புண்ணியம்
“அண்ணல் அருளால் அருளியது இவ்வாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடி நூறாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே”                               பாடல் 60

ஆன்மாக்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமான் அருளியது இந்த ஆகமம். இது வானவர் முதலான தேவர்களாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அரும் பொருளுடையது. எண்ணிப் பார்த்தால் எழுபது கோடி நூறாயிரம் எண்று இருக்கும் எண்ண முடியாத சிறப்புடையது. இதன் பொருள் உணராது, சிறப்பறியாது ஓத நினைப்பவர்களுக்கு நீர் மேல் எழுத்துப் போல் அது மனம் கொள்ள முடியாது போகும். அதாவது நீர் மேல் எழுத முடியாது, எழுதினாலும் உடனே மறைந்து விடும். அதுபோல அருமை உணராது ஆகமம் ஓதுதல் பயனற்றது என்பது பொருள்.

                      வானவர்க்குத் துணை ஆகமம்
“பரனாய்ப் பராபரம் காட்டி உலகின்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாய் ஆகமம் ஓங்கி நின்றானே”                                   பாடல் 61
​
பரம் பொருளாகிய சிவபெருமான் சின் முத்திரை காட்டி உலகைக் காத்தருளுகிறான். சனகன், சனாதனன், சனந்தனன், சனற்குமாரன் ஆகிய நான்கு முனிவருக்கும் வாக்கிறந்த பூரணமாய் நான்மறைப் பொருளைச் சொல்லியவன். தேவர்கள் தலைவனாய், அவர்களால் தொழப்படுபவர்களான நந்தியெம் பெருமானே அவர்களுக்குக் காவலரனாக ஆகமம் அருளிச் செய்தான்.
​


இந்தப் பக்கம் Free Web Hit Counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    ALL
    திருமந்திரம் தொடர்கள்

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025