• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 16 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

28/7/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 16 )
                              (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                             திருமந்திரம் என்னும் தமிழ் மந்திரம் மூவாயிரம்
“மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே”                              பாடல் 99
​
திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களான தமிழ் மந்திரங்கள், இந்த உலகம் பயன் அடைய, நந்தி எம்பெருமான் அருளாலே திருமூலர் திருவாக்காக வெளிப்பட்டது. இம்மந்திரங்களை ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து, அதன் உண்மைப் பொருள் உணர்ந்து, படித்துப் பாராயணம் செய்தால் உலகுக்கெல்லாம் தலைவனாகிய சிவப் பரம்பொருளின் பேரருள் கிடைக்கப் பெறுவர்.

Picture
எல்லோருக்கும் பொதுவான திருமந்திரம்
“வைத்த பரிசே வகைவகை நன்நூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்தி செய்து பூர்வத்து மூவாயிரம் பொது
வைத்த சிறப்புத் தரும்இவை தானே”                                  பாடல் 100

ஆன்மாக்கள் உய்ய வகுத்து வைத்த பரிசே இத்திருமந்திரம் என்னும் நல்ல வேதம். இதில் உள்ள மூவாயிரம் பாடல்களும் வீட்டின்ப விளக்கமாகும். அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செய்யப்பட்ட மூவாயிரம் தமிழ் மந்திரங்களும் எல்லோருக்கும் பொதுவானவை. சிந்தையில் பதித்து செபிப்பவர்களுக்குச் சிறப்பைத் தருபவை இம்மந்திரங்களே.

                  சுந்தர ஆகமம் திருமந்திரம்
“வந்த மடம்ஏழும் மன்னும் சன்மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தர ஆகமச் சொல் மொழிந்தானே”                                  பாடல் 101

சிவ நெறி பரப்ப வந்த திருமடங்கள் ஏழு. இவற்றில் சன்மார்க்க நன்நெறியில் நின்று திருத்தொண்டு செய்ய என்று முதன் முதலாகத் தோன்றியது திருமூலர் திருமடம். ஒன்பது தந்திரம் தொடர்பான மூவாயிரம் மந்திரங்கள் என்னும் இவ்அழகிய திருமந்திர மொழியாகிய ஆகமத்தைத் திருமூலர் அருளினார்.

                            தவயோகிகள் எழுவர்
“கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர் நாதாந்தர்
புலம்கொள் பரமானந்தர் போக தேவர்
நிலம்திகழ் மூலர் நிராமயத் தோரே”                                  பாடல் 102

திருவருளும் குருவருளும் கலந்த மெய்த் தவயோகிகள் காலாங்கர், அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகநாதர், திருமூலர் என்னும் எழுவராவர். இவர்கள் அனைவரும் இறவா உடல் பெற்ற தவஞானிகள்.

                                               வேத விழுப் பொருள்
“அளவுஇல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவுஇல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்அடியார் சொல்
அளவில் பெருமை அரிஅயற்கு ஆமே”                                பாடல் 103

காலகாலமாக என்றும் குறையாது இருக்கின்ற எல்லையில்லாத இளமைத் தோற்றமும், அளவிட இயலாத அருளும், எண்ண முடியாத பல கோடி கற்ப காலமாக நான்மறைகளாலும் உணர்ந்தறிய முடியாததாகிய சிவபெருமானின் அடியவர்களாகிய மெய்த் தொண்டர்கள் மொழிந்த மந்திரங்களின் சொல்ல முடியாத பெருமை, திருமாலும், பிரமனும் கூட அறிந்துணர முடியாததாகும்.

                    மூவரும் ஒருவரே
“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே”                              பாடல் 104

உலகத் தோற்றத்திற்கு மூல முதல் காரணமான உருத்திரனும், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்திருக்கும் நீலமணி வண்ணமுடைத் திருமாலும், உயிர்களைப் படைப்பவனாகிய தாமரை மலர் மேல் இருக்கின்றவனான பிரமனும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களால் வேறானாலும், மூவரும் ஒரு மூலப் பரம்பொருளான சிவனே என்பதை உணராமல், இவர்கள் மூவரும் வேறு, வேறு என்று வித்தியாசப்படுத்தி, உலகத்தவர் மோதி முரணுகிறார்களே!
​
                     பிரணவப் பொருளானவன் பெருமான்
“ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே”                                   பாடல் 105
​
இறைவன் இருவினையாகிய கன்மம் மாயை என்னும் இரண்டுக்கும் இருப்பிடமானவன். இரண்டையும் கடந்து நிற்பவன். இந்த ஈசனை அடைய “ஓம்” என்னும் பிரணவ மந்திரமே முதல் பெரும் தெய்வம். இந்த உண்மையை அறியாமல் கடவுள், அது, இது எனப் பலவாறு கூறுவர். இவர்கள் உண்மை உணராதவர்கள். ஆனால் இந்த உண்மையைத் தூய நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் மெஞ்ஞானிகள் உணர்ந்து, பரம்பொருள் மூலத்தையே அறிந்திருந்தார்கள்.
​

இந்தப் பக்கம் Free Web Hit Counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    ALL
    திருமந்திரம் தொடர்கள்

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025