மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • New Page

திருமந்திரம் - பாகம் 28 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

10/3/2019

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 28 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

வாழ்நாளை வீண் நாளாக்காதீர்கள்

“காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே”                                                            பாடல் 182
​
காலைப் பொழுதில் கண் விழித்து எழுந்தவர்கள் நித்தம் நித்தம் மாலைப் பொழுதாகி இரவு வந்தவுடன் உறங்கப் போவதும், இப்படியே ஒவ்வொரு நாள் பொழுதும் உறங்குவதும் விழிப்பதுமாக வாழ்நாள் வீணாகக் கழிகின்றன. அருமை உடையதாகிய வாழ்வை இப்படி வீணாக்குபவர்களை இறைவன் கோபிப்பான். என்றாலும் அவனை மனம் பொருந்த நாளும் நினைந்து பணிபவர்களுக்கு அவன் நல்லருள் புரிவான்.

Picture
புலனடங்கத் தானடங்கும் போதம்

“பருஊசி ஐந்தும்ஓர் பையினுள் வாழும்
பருஊசி ஐந்து பறக்கும் விருகம்
பருஊசி ஐந்தும் பணித்தலைப் பட்டால்
பருஊசிப் பையும் பறக்கின்ற வாறே”                                  பாடல் 183

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களாகிய ஊசிகளும் நம் உடலாகிய ஒரு பைக்குள் வாழ்கின்றன. இந்த ஐந்து புலன்களாகிய மிருகங்களும்  அடங்கி இருக்க மாட்டா. அவை தம் விருப்பத்திற்கேற்ப பறக்கும் இயல்புடையன. இந்த ஐம்புலன்களும் அடங்கி, அவற்றை அடக்கி, இவற்றைத் தம் விருப்பப்படி செயல்படாது தன்னுள் அடக்கித் தானடங்கச் செய்தால், இந்த உடல் விண்ணில் பறக்கும் வித்தை கற்கும்.

வினை வெல்ல வழி அறிக

“கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உள்நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்உறு வாரையும் வினைஉறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்துஒழிந் தாரே”                             பாடல் 184

இடகலை ஆகிய சந்திர கலையும், பிங்கலை ஆகிய சூரிய கலையும் உடலுள் இருந்து உயிரியக்கத்தை நடத்துகிற உண்மை ஞானத்தைப் பலரும் அறியாமலிருக்கின்றார்கள். இந்த ஞானத்தை முப்பது வயதுக்குள் அறிந்தவர்கள் வான் உலகப் பேறு பெறுவார்கள். அறியாதவர்கள் வினைப் பயனை அனுபவித்து வீழ்ந்து படுவர்.

மீண்டும் மீண்டும் பிறக்காதிருக்க

“ஒன்றிய ஈர்எண் கலையும் உடல்உற
நின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்புஒழி யாரே”                               பாடல் 185

பதினாறு கலைகளும் உடலில் பொருந்தியுள்ள உண்மை நிலையை கீழ்மக்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. உயிர்களைச் சினந்து அழிக்கின்ற காலனாகிய உருத்திர மூர்த்தி அவர்களை அழித்துக் கருப்பைக்குள் வைக்கிறான் (பிறவித் துயர் அடையச் செய்கிறான்). இவர்களும் அறிவுத் தெளிவு பெறாமல் மீண்டும், மீண்டும் பிறந்திளைத்துப் பிறவித் துயருக்கு ஆளாகின்றனர்.

பக்குவம் எய்தும் பரமானந்தம்

“எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே”                                  பாடல் 186

மனிதனாகப் பிறந்த பிறவியின் பெருமையை எண்ணி, இந்தப் பிறவியில் இளமைப் பருவம் இருக்கும் போதே இசை பாடி ஈசனைத் தொழுது பணியுங்கள். மானுடப் பிறப்பும், இளமையும் இருக்கும் போதே இறை உணர்வுக்குத் தடையாக இருந்த மன மயக்கங்களைத் தூக்கி எறிய அறியாது இருந்தவன், இதைத் தூக்கி எறியும் பக்குவ நிலை எய்திய போது, என்னுள் இருந்த பரனோடு கலந்து பேரின்பம் கண்டேன்.

உயிர் நிலையாமை

“தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யார்அவர் தாமே”                            பாடல் 187

மரக் கிழைகளில் அழகிய இளம் தளிர்களும், குளிர்ச்சியான மலர்களும் தழைத்து வளர்ந்து மலர்கின்றன. ஆனால் இவை எல்லாம் ஒரு நாள் காய்ந்து உலர்ந்து போக, மரம் மொட்டையாகிப் பட்டுப் போகிறது. இதைக் கண்டும் உயிர் உள்ள போதே உயிர்த் தலைவன் திருவடிகளைத் தவறாது நினைத்துப் பணியாதவர்கள் எமன் அழைப்பு வந்த அந்த இறுதி நாளில் மட்டும் ஈசனை நினைத்து எண்ணுவார்களா?. அவனை எப்போதும் நினைக்க வேண்டும் என்ற மாபெரும் உண்மையை அப்போதும் இவர்கள் அறிய மாட்டார்கள்.

வினைக்கு விளைநிலம் உடல்

“ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே”                             பாடல் 188
​
உடல், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளுக்கு உரிய உடமைப் பொருளாக (விளை நிலமாக) விளைந்து கிடந்தது. பிரமன், உருத்திரன், திருமால், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவருக்கும் நாயகனான சிவப்பரம்பொருள் ஆணை வரவே (எமன் வரவே) ஐம்பொறிகளும் உடலைக் காப்பதைக் கைவிட்டுவிட்டன. (உடல் இறந்து விட்டது)
​

இந்தப் பக்கம் website counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023