(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
எல்லாம் இறைவன் அருள்
“நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளால் நான் இருந்தேனே” பாடல் 92
என் தலைவன் நந்தி. அவன் அருளாலே நான் சாத்தனூர் மாட்டிடையன் மூலன் உடலில் புகுந்தேன். பின் நந்தி அருள் துணையாலேயே சிவாகம மந்திரம் செப்பலானேன். நந்தி எம் பெருமான் அருள் வழி காட்டுதலின்படியே நான் மெய்ஞ்ஞான சித்தி பெற்றேன். இப்படியாக நான் பெற்றது உற்றது எல்லாமும் நந்தி அருளாலேயே அல்லாமல், இதில் என் செயல் ஒன்றுமில்லை.